<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-293756594976255278</id><updated>2011-10-24T07:23:07.669-07:00</updated><category term='பாவலரேறு பெருஞ்சித்திரனார்'/><category term='காங்கிரசு'/><category term='இந்தியா'/><category term='ஈழம்'/><category term='குழந்தை இலக்கியம்'/><category term='இலக்கியம்'/><title type='text'>தமிழொளி</title><subtitle type='html'>அடிமைத் தமிழனின் மனவோட்டங்கள்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>10</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-5555802676298534739</id><published>2010-03-10T09:37:00.000-08:00</published><updated>2010-03-10T09:37:54.600-08:00</updated><title type='text'>தமிழொளி: வாழ்வியல் முப்பது</title><content type='html'>&lt;a href="http://thamizholi.blogspot.com/2010/03/blog-post.html"&gt;தமிழொளி: வாழ்வியல் முப்பது&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-5555802676298534739?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='related' href='http://thamizholi.blogspot.com/2010/03/blog-post.html' title='தமிழொளி: வாழ்வியல் முப்பது'/><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/5555802676298534739/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2010/03/blog-post_10.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/5555802676298534739'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/5555802676298534739'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2010/03/blog-post_10.html' title='தமிழொளி: வாழ்வியல் முப்பது'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-3919530101371313150</id><published>2010-03-10T08:59:00.000-08:00</published><updated>2010-03-10T09:36:29.315-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவலரேறு பெருஞ்சித்திரனார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தை இலக்கியம்'/><title type='text'>வாழ்வியல் முப்பது</title><content type='html'>&lt;div align="left"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;வாழ்வியல் முப்பது&lt;/span&gt;&lt;br /&gt;பாவலரேறு பெருஞ்சித்திரனார்&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;a href="http://1.bp.blogspot.com/_bEftDVPH1e8/S5fRdEDPbPI/AAAAAAAAAHc/yJl9n5_o5OY/s1600-h/pavalareru+mase+copy.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5447052571561651442" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 280px; CURSOR: hand; HEIGHT: 310px" alt="" src="http://1.bp.blogspot.com/_bEftDVPH1e8/S5fRdEDPbPI/AAAAAAAAAHc/yJl9n5_o5OY/s320/pavalareru+mase+copy.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;strong&gt;புகழ்ச்சியின் மயக்கறு!&lt;br /&gt;புன்மையை உதறு!&lt;br /&gt;இகழ்ச்சியைத் தாங்கு!&lt;br /&gt;எள்ளலை எடுத்தெறி!&lt;br /&gt;நிகழ்ச்சியை வரிசைசெய்!&lt;br /&gt;நினைவை உறுதிசெய்!&lt;br /&gt;மகிழ்ச்சியும் துயரமும்&lt;br /&gt;மனத்தின் செயல்களே!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 1 உரைக்குறிப்புகள் : (எண் அடிகள் எண்)&lt;br /&gt;1. புகழ்ச்சியின் மயக்கு-பிறர் கூறும் புகழ்ச்சியுரைகளால் ஏற்படும் உணர்வுக் கிறக்கம்; அறுத்தல்-அடியோடு நீக்குதல்.&lt;br /&gt;2. புன்மை-இழிவாம் தன்மை; உதறுதல்-பற்றப் பற்றத் தவிர்த்தல்.&lt;br /&gt;3. இகழ்ச்சி-செயப்பெறும் நல்வினைகளின் மேல் அறியாமையால் கூறப்பெறும் இகழ்ச்சியுரைகள்.&lt;br /&gt;4. எள்ளல்-அருமை வினைகளை எளிமையாகக் கருதி உரைக்கப்பெறும் புன்சொற்கள்.&lt;br /&gt;5. வரிசை-செயப்பெறும் வினைகளை அறிவானும் வினையானும் வகைப்படுத்தி இடத்தானும் காலத்தானும் பொருந்த அமைத்துக் கொள்ளுதல்.&lt;br /&gt;6. நினைவை உறுதி செய்தல்-செயத் தக்கவற்றுக்கும் தகாதனவற்றிற்கும் வேராகிற நினைவுகளை அறிவான் தேறி செயலுக்குரியனவாகத் தெரிந்தெடுத்தல்.&lt;br /&gt;7,8. மகிழ்ச்சி என்பதும் துயரம் என்பதும் செயப் பெறும் வினைகட்கு ஏற்ப மனம் அவ்விடத்துப் பெறும் உணர்வு முடிபுகளுக்கான பெயர்களாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஊக்கமும் முயற்சியும்&lt;br /&gt;உண்மையும் நேர்மையும்&lt;br /&gt;ஆக்க வினைகளும்&lt;br /&gt;அடிப்படைக் கொள்கைகள்!&lt;br /&gt;ஏக்கம் அகற்று!&lt;br /&gt;ஏறுபோல் வினைசெய்!&lt;br /&gt;தாக்கும் இழிவுகள்&lt;br /&gt;தாமே விலகிடும்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 2 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1-4. மனவெழுச்சியும் அறிவு, உடல் இவற்றின் வழித்தாகிய முயற்சியும், தோற்ற நிலை முதல் முடிவு நிலை வரை உணர்வு தலைமாறாத உண்மையும், நடுநிலை பிறழாத நேர்மையும், அவற்றின் வழி விளைக்கப்பெறும் ஆக்கச் செயல்களும் மாந்தவினம் முழுமைக்கும் பொதுவான கொள்கைகள் ஆகும் எனத் தேர்க.&lt;br /&gt;5. ஏக்கம்-ஒன்றைப் பெற வேண்டி உயர்ந்து நிற்கும் மனவுணர்வு.&lt;br /&gt;6. விலங்கினக் கடாப் போலும் வினைக்கண் இடர்ப்பாடு வந்தவிடத்தும் தளராது இயங்குதல். (மடுத்த வாயெல்லாம்... குறள் எண் 624)&lt;br /&gt;7,8. நுண்பொருள் இயக்கக் கொள்கைப் படி முடுக்க வினை புறத்தாக்கு வினைகளை வலிவிழக்கச் செய்யும் என்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றைய நாள்நினை!&lt;br /&gt;இனிவரும் நாள்நினை!&lt;br /&gt;என்றும் புதியன்,நீ!&lt;br /&gt;யாவும் புதியன!&lt;br /&gt;அன்றன்றும் புதுநாள்!&lt;br /&gt;அனைத்தும் இனியன!&lt;br /&gt;ஒன்று,கை போகின்&lt;br /&gt;ஒன்றுன் கைவரும்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 3 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. நாளின் வரவையும், வரவின் செலவையும் கொன்னே அது கழியும் வெறுமையும் நினைக்க.&lt;br /&gt;2. அறியா நிலையின் வறிதே கழிய விட்ட நாள் போயினும் அறிந்த நிலையின் இனிவரும் நாள் பயன் கொள்க என்றபடி.&lt;br /&gt;3,4. ஒவ்வொரு நாளும் உயிரும் மெய்யும் இவை வேறாய பருப்பொருள்களும் தத்தம்மளவில் அகத்தும் புறத்தும் மலர்ச்சியுறுதலான் உயிர்மெய்யுள்ளிட்ட அனைத்தும் அன்றன்றும் புதியனவே என எண்ணிப் புத்துணர்வு பெறுக.&lt;br /&gt;5. உயிர்ப் பொருளும் உயிரல் பொருளும் புதியனவாகையால் ஒவ்வொரு காலக்கூறும் புதுமையே என உணர்க.&lt;br /&gt;6. உயிர் இனிமையெனின் உயிர் வளர்ச்சிக்குற்ற சூழல்கள் அனைத்தும் இனியனவே என்பது மெய்ப்பொருள் கொள்கை.&lt;br /&gt;7,8. உயிரும் உயிர்த் தொடர்பாய வினைகளும் ஒரு நெடுந் தொடரி போல் நிரலுடையனவாகலின் ஒன்று கைவிட்டுப் போதலும் மற்றொன்று கை வந்து சேர்தலும் இயல்பு நிகழ்ச்சிகள் என்க. எனவே கை கழிந்தது பற்றிக் கவலுறாது, கை மலிந்தது பற்றி மகிழ்வுறுக என்பதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உள்ளம் விழைவதை&lt;br /&gt;அறிவினால் ஓர்ந்துபார்!&lt;br /&gt;தள்ளத் தகுவன&lt;br /&gt;உடனே தள்ளுவாய்!&lt;br /&gt;தள்ளத் தகாதென்&lt;br /&gt;றறிவு தேர்வதைக்&lt;br /&gt;கொள்ள முயற்சிசெய்!&lt;br /&gt;கொடுநினை வகற்று!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 4 உரைக் குறிப்புகள் :&lt;br /&gt;1,2. உள்ளுணர்வுக் கிளர்ச்சியை அறிவினால் எண்ணியாய்ந்து கொள்ளுக!&lt;br /&gt;3,4. தன்னுயிர் நிலைக்குப் பொருந்தா நிலைகள் என்று அறிவு தெளிய வைப்பனவற்றை அவ்வப் பொழுதிலேயே தள்ளிப் புறத்தொதுக்குக!&lt;br /&gt;5-7. உயிரியக்கத்திற்குப் புறப்படுத்தக் கூடாதது - தள்ளி வைக்கத் தகாதது என்று அறிவு ஆய்ந்து தேறியதை அகப்படுத்திக் கொள்ளுக!&lt;br /&gt;8. உள்ளத்தை வளைய வைக்கும் கொடிய நினைவுகளை அகற்றுக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயர்வாய் நினைப்பன&lt;br /&gt;உன்னை உயர்த்தும்!&lt;br /&gt;மயர்வாம் நினைவுகள்&lt;br /&gt;அறிவையும் மயக்கும்!&lt;br /&gt;துயர்வுறும் வினைக்குத்&lt;br /&gt;துணிவுகொள் ளாதே!&lt;br /&gt;அயர்வின்றி இயங்கு&lt;br /&gt;ஆக்கம் துணைவரும்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 5 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. உயர்வாய் எண்ணுதல் - மேலானவற்றை எண்ணுதல்; உயர்த்தல் - மேனிலையில் நிறுத்தல்.&lt;br /&gt;3,4. மயர்வு - தெளிவில்லாமல் குழம்பிக் கிடக்கும் நினைவுகள். மனமயக்கம் அறிவையும் மயங்கச் செய்யும்.&lt;br /&gt;5,6. துயர்வுறும் வினை - முடிவில் துன்பத்தைத் தரும் வினை.&lt;br /&gt;7,8. அயர்வு - வினைச்சோர்வு; ஆக்கம் துணை வரும் - வினையளவான் விளைகின்ற ஆக்கம், அடுத்தடுத்துச் செய்யும் வினைகளுக்குத் துணை நிற்றல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒழுக்கமே உன்றனை&lt;br /&gt;உயர்த்திடும் படிநிலை&lt;br /&gt;இழுக்கம் இழுக்கு!&lt;br /&gt;இழிவுறும் அதனால்!&lt;br /&gt;பழக்கம் கொடியது!&lt;br /&gt;பண்புபொன் மகுடம்!&lt;br /&gt;இழக்கும் பொழுதுகட்(கு)&lt;br /&gt;ஈட்டம் நினைந்துபார்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 6 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. ஒழுக்கம் - மன, மொழி, வினைகளால் நேர்பட ஒழுகுதல், உலகச் சிறப்பு நடை.&lt;br /&gt;3,4. இழுக்கம் - தாழ்வுறுதல்; இழுக்கு - கீழ்மையும் பழியும்&lt;br /&gt;5. பழக்கத்திற்கு அடிமையாதல் நம்மைத் தாழ்ச்சியுறச் செய்யும்; கொடியது - தாழ்ச்சியுறச் செய்வது.&lt;br /&gt;6. பொன் மகுடம்: பொன்முடி - நிலையானும் தகுதியானும் அரச மதிப்படையச் செய்வது.&lt;br /&gt;7,8. பொழுதை இழந்து வினைப்பயன் பெறுதல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒவ்வொரு நொடியும்&lt;br /&gt;உனக்கென வாய்த்தது!&lt;br /&gt;எவ்வொரு நொடியும்&lt;br /&gt;இழத்தல்செய் யாதே!&lt;br /&gt;இவ்வொரு நொடிக்கே&lt;br /&gt;ஏங்கி யிருந்ததாய்&lt;br /&gt;அவ்வொரு நொடியும்&lt;br /&gt;அளாவிப் பயன்பெறு!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 7 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. வாழ்வுக் காலத்தே வந்து விரைந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும் நமக்காகத்தான் வாய்த்தது என எண்ணி வினை செயல் வேண்டும்.&lt;br /&gt;3,4. எந்தவொரு மணித்துளியும் வெறுமனே பயனற்றுப் போகுமாறு வினை செய்வதை இழந்து விடாதே! (அவ்விழப்பு ஈடு செய்யவொண்ணாது!)&lt;br /&gt;5-8. வருகின்ற அந்த ஒரு மணித்துளிக்காகத்தான் நாம் ஏங்கிக் காத்திருந்தோம் என்னும் மன ஆர்வத்துடன், ஒரு சிறு பொழுதையும் இழந்து விடாமல் வினைப்பட்டு முழுப்பயன் பெறுமாறு அளாவி ஈட்டம் கொள்ளுதல் வேண்டும் என்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேற்றெனல் வேறு!&lt;br /&gt;இன்றெனல் வேறு!&lt;br /&gt;நேற்றிருந் ததுபோல்&lt;br /&gt;இன்றிருந் திடாதே!&lt;br /&gt;நேற்றினும் இன்றுநீ&lt;br /&gt;நெடிது வளர்ந்துளாய்!&lt;br /&gt;நேற்றைய வளர்ச்சியுள்&lt;br /&gt;நினைவொடுக் காதே!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 8 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. நேற்று என்று சொல்வது அது கடந்து போனது ஒன்றானதால் வேறு. அதுபோல் இன்று என்று சொல்வது கடக்க வாய்த்திருக்கின்ற பொழுதாயினதால் இது வேறு.&lt;br /&gt;3,4. நேற்றிருந்த அதே நிலையில் இன்றைக்கும் இருந்திடல் கூடாது. (ஏனெனில் காலம் வளர்ந்து புதிய பொழுதுகள் முளைத்துக் கொண்டேயிருக்க, நாமும் முந்திய அதே கால நிலையிலேயே இருத்தல் கூடாதென்பதாம்.)&lt;br /&gt;5,6. நேற்றினும் இன்றைக்கு அகத்திலும், புறத்திலும் உயர்வாக வளர்ந்திருக்கின்ற நிலையினை எண்ணி, மேலும் புதிய வளர்ச்சிக்கு ஊக்கங் கொள்ளுதல் வேண்டும் என்க.&lt;br /&gt;7,8. நேற்றைய வளர்ச்சி, நேற்றைய அகப்புறத் தழைப்பாதலின் அதுபற்றியே எண்ணி, இன்றைய பொழுதை ஈட்டமின்றிக் கழித்துவிடல் கூடாது என்பதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நேற்றைய நினைவுகள்&lt;br /&gt;இன்றைய செயல்கள்!&lt;br /&gt;நேற்றைய அறிவோ!&lt;br /&gt;இன்றறி யாமை!&lt;br /&gt;நேற்றைய அடிக்குமேல்&lt;br /&gt;நெட்டடி இன்றுவை!&lt;br /&gt;நேற்றுநீ காற்றெனில்&lt;br /&gt;நீள்விசும் பின்றுநீ!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 9 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. இன்றை வினைப்பாடுகள் யாவும் நேற்றைய எண்ண மலர்ச்சியின் விளைவே! நேற்றைய எண்ண அளவும், அதன்வழி வினையளவும் தெரியவே இன்றைய எண்ண ஆற்றலை மிகுவிக்க!&lt;br /&gt;3,4. நேற்று அறிவென எண்ணியது, இன்றைய வளர்ச்சியில் அறியாமையாகவும் இருக்கலாம் எனக் கொள்ளுக!&lt;br /&gt;5,6. நேற்றைய வளர்ச்சிக்கென எடுத்த முயற்சியை (அதன் வினையளவு தெரிதலான் மேலும் வலியதாக இன்றைக்குச் செய்க.&lt;br /&gt;7,8. நுண்மையும், வன்மையும், நீண்மையும் உடைய காற்றுப் போலும் நேற்றிருந்தாயெனில், அக்காற்றையும் உள்ளடக்கித் தற்சார்புடையதாகவுள்ள நெடிய வான் போல் இன்றைக்கு விளங்குக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உன்றன் விழிகளை&lt;br /&gt;உயர்த்துக வானில்!&lt;br /&gt;உன்றன் செவிகளை&lt;br /&gt;உலகெலாம் பரப்புக!&lt;br /&gt;குன்றுபார்! கதிர்பார்!&lt;br /&gt;கோடிவிண் மீன்பார்!&lt;br /&gt;நின்றுபார்! நடந்துபார்!&lt;br /&gt;சிறுநீ, உலகம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 10 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. விழிகளை உயர்ச்சியும் விரிவும் தூய்மையும் சான்ற வான் நோக்கி உயர்த்துக! விழியை உயர்த்தவே, மனமும் அறிவும் தாமே உயர்வனவாகும் என்க.&lt;br /&gt;3,4. செவிகளை உலக முழுமையும் பரப்பிக் கொள்ளுக! பரப்பவே, உலகின் மூலை முடுக்குகளினின்று வெளிப்படும் அனைத்து அறிவு நிலைகளும் கேள்வியால் உணரப்பெறும் என்க.&lt;br /&gt;5,6. உயர்ந்து நிற்கும் குன்றையும், ஒளிபரப்பும் கதிரையும், எண்ணத்திற்கு எட்டாதனவும், அளவிடற்படாதனவுமாகிய விண்மீன் கூட்டங்களையும் பார்த்து மனத்தை அவ்வாறு சிறக்கச் செய்க என்பதாம்.&lt;br /&gt;7,8. இயக்கமின்றி ஓரிடத்தில் அமைவாக நிற்க; நின்று பின் இயங்குக; இயங்குகையில் கால்களாலேயே நடக்க, இங்ஙன் இயற்கையைத் துய்க்க, அதனொடு உன்னை ஒப்பிடுக. அக்கால் நாமும் ஒரு சிறு உலகம் என்பதை உணர்தல் இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றுயிர் எறும்பும்&lt;br /&gt;சுற்றுதல் காண்,நீ!&lt;br /&gt;மற்றுயிர் எல்லாம்&lt;br /&gt;இயங்குதல் மதித்துணர்!&lt;br /&gt;அற்றெனில் நீ,ஏன்&lt;br /&gt;அமர்ந்திங் கிருப்பது?&lt;br /&gt;கற்றுவா; எண்ணிவா;&lt;br /&gt;காற்றில் நனைந்துவா!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 11 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. சிற்றுயிர் வகைகளில் ஒன்றான எறும்பும் அயர்வின்றிச் சுற்றிச் சுற்றி யியங்குதலைக் காண்க என்பதாம்.&lt;br /&gt;3,4. அதே போலும், எல்லா உயிர்களும் அதனதன் நிலை யியக்கங்களில் மாறுபடாது இயங்கி நிற்றலைப் பெருமையோடு போற்றி உணர்க!&lt;br /&gt;5,6. உயிரிகள் அவ்வாறு முறையாக அவ்வவற்றின் நிலைக்கேற்ப அயர்வின்றி இயங்குதலைக் உணர்ந்தபின், அதே உயிர் வகைகளின் மேனிலையுயிரான மாந்தவினத்தே ஒரு கூறான நாம் மட்டும் எதற்காக ஓரிடத்திலேயே அமைந்து கொண்டு வாளாவிருக்க வேண்டும்? நாமும் நம் உயிர் நிலைக்கேற்ற உயர் இயக்கங்களில் மேம்பட்டு அயர்வின்றி இயங்குதல் வேண்டும் என்பதாம்.&lt;br /&gt;7,8. தொடர்ந்து கற்றலில் திளைத்து வருக! மாந்த உயிரினத்திற்கு மட்டும் அரிதின் அமர்ந்த எண்ணத்திடை மூழ்குக! மனம் எண்ணத்திடை மூழ்கையில் உடல் காற்று நிரம்பிய வெட்ட வெளியிடை மூழ்கட்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மலைமுக டேறு&lt;br /&gt;மடுவினில் இறங்கு!&lt;br /&gt;கலைகுவி சோலையுள்&lt;br /&gt;காற்றாய் நுழைந்துபோ!&lt;br /&gt;அலைவீட் டுள்புகு!&lt;br /&gt;ஆற்றினில் நீந்து!&lt;br /&gt;புலைநினை வழிந்திட&lt;br /&gt;இயற்கையுள் புதை,நீ!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 12 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. எண்ணத்தாலுமன்றி மெய்யாலும் உயரமான மலைகளின் உயர்ச்சியாம் முகட்டில் ஏறி உணர்க! உடலை உயர்த்துகையில் எண்ணங்களும் தாமே உயர்வன காண்க!&lt;br /&gt;2. ஆழமான நீர்நிலையிலும் இறங்கியாடுக! (உயர்ச்சியில் ஏறுதலும், ஆழத்தில் இறங்குதலும் வாழ்வமைப்பில் நம்மை நிலைநிறுத்திக் கொள்ளவுமாகலின்.)&lt;br /&gt;3,4. கலையழகு குவிந்துள்ள பூஞ்சோலைகளில் காற்று நுழைந்து போவது போலும் மனமணைந்து நுழைந்து இயற்கை யின்பம் துய்த்தல் வேண்டும் என்பதாம்.&lt;br /&gt;5. நீர்க்கூரையால் வேயப்பெற்றது போலும் எம்பி அளாவி மறையும் அலைகளின் உட்புகுந்தும் அருவிகளுட் குடைந்து சென்று இன்பம் பெறுக!&lt;br /&gt;6. படுகையில் நெடுங்கிடையாக ஓடும் ஆற்று நீரிலும் நீந்தி மகிழ்க!&lt;br /&gt;7,8. மேற்காட்டியவாறு கொள்ளும் இயற்கையீடுபாடு மன விரிவையும், மனச் செப்பத்தையும் உருவாக்குதலின் நம்மையறியாமல் நம்முட் புகும் இழிவான நினைவுகள் அழிந்து போகும் என்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உயிரை மலர்த்து!&lt;br /&gt;உணர்வை அகல்செய்!&lt;br /&gt;பயிர்,நீ! கதிர்,நீ!&lt;br /&gt;பழம்பெரும் வான்,நீ!&lt;br /&gt;துயர்கொளும் சிறிய&lt;br /&gt;துகளிலை; நீ,ஓர்&lt;br /&gt;உயிரொளிப் பிழம்பு;&lt;br /&gt;உலக உடம்பு!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 13 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. உயிரை மேலும் ஒளியுடையதாகச் செய்வதே வாழ்வாகலின் அதனை மலர்ச்சியுறச் செய்க என்றபடி.&lt;br /&gt;2. சென்றதிலேயே செல்லாமல் மற்றதினும் செல்லுமாறு உணர்வை அகலச் செய்க!&lt;br /&gt;3,4. மண்ணில் ஊன்றிய பயிர்போலும், நாமும் உலவும் பயிர் போலவாம் என்க! உலகுக்கு ஒளிதரும் கதிரவன் போல் நாமும் உள்ளொளி சான்ற மாந்தக் கதிர் என்க! வானிடை நின்று நீந்தும் உலக உயிர் நாம் ஆகலின் நாமும் வானே போலும் என்க!&lt;br /&gt;5,6. நாம் அலைவுற்றுத் துன்புறும் நுண்சிறு துகளில்லை.&lt;br /&gt;7,8. ஒளி சான்ற உயிர்ப்பிழம்பு! உலகம் போலும் நாமும் ஓர் உடம்புலகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிற்றிறை வன்,நீ!&lt;br /&gt;சிந்தனை வெள்ளம்!&lt;br /&gt;அற்றிடாப் பிறவி!&lt;br /&gt;அறிவுக் கொழுந்து!&lt;br /&gt;வற்றிடா ஊற்று;&lt;br /&gt;வளர்பெரும் புடவி!&lt;br /&gt;குற்றிடா நெற்று!&lt;br /&gt;கோடிக் குமுகம்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 14 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. உலக மூலக்கூறாம் இறைமைப் பொருளினின்று தோன்றிய நாமும் சிறிய ஓர் இறைமைப் பொருளே என்க.&lt;br /&gt;2. நாம் ஓர் எண்ண நீர்ப் பெருக்கு!&lt;br /&gt;3. இவ்வுடம்போடு கூடிய இவ்வுயிர்ப் பிறவி இத்துடன் அற்றுப் போவதன்று; தொடர்ந்து பிற உயிர்த் தொடர்ச்சியையும் உண்டாக்குவது.&lt;br /&gt;4. அறிவுச் சுடர் வீசும் உயிர்க் கொழுந்து நாம்.&lt;br /&gt;5. எப்பொழுதும் வற்றாத அறிவு ஊற்று நாம்! (நீரூற்று வற்றிப் போவது போல் நம்பாலிருக்கும் அறிவூற்று எக்காலும் வற்றாத தன்மைத்தாகலின் அஃதுடையேம் என்க.)&lt;br /&gt;6. மேலும் மேலும் விரிந்து கொண்டே வளர்ந்து பெருகும் புடவி போன்ற உயிர்ப் பிறவி நாம்.&lt;br /&gt;7,8. குற்றப்படாத நெற்று விதை போலும் நாம் உலக நல விளைவுக்கான நல் வித்து. முன்னோன் ஒருவனினின்று தோன்றிய நாமும் பின்னே ஒரு குமுகத்தை உருவாக்கும் திறன் படைத்துள்ளோம் என அறிக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுமையை எண்ணிச்&lt;br /&gt;சிறுத்துப்போ காதே!&lt;br /&gt;வெறுமையை நினைந்து&lt;br /&gt;வெயர்த்தழி யாதே!&lt;br /&gt;குறுமை நினைவுகள்&lt;br /&gt;குறுமையாம் வாழ்க்கை!&lt;br /&gt;நறுமை நினைவுகள்&lt;br /&gt;நல்லொளிப் பிறவி!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 15 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. கீழ்மை நினைவுகள் கீழ்மைப் படுத்துவவாகலின், அவை நம்மைப் பயனற்ற சிறியேமாக்கி விடும் என்க.&lt;br /&gt;3,4. பயனற்ற வெற்று நிலைகளில் மனத்தைப் பதித்து அதற்கென ஏங்கி வெம்பிப் புழுங்கி மனம் வெயர்த்து அழிவுறாதிருப்போமாக!&lt;br /&gt;5,6. குறுகிய நோக்கும், எண்ணமும் வாழ்க்கையைக் குறுக்கிக் கீழ்நோக்கித் தள்ளுமாகலின் அவ்வெளிதாந் தன்மையை நாமும் அடையாது நம்மினின்று நீக்குவோமாக!&lt;br /&gt;7,8. நறிய நல்லெண்ணங்களுக்கான பிறப்பை நல்லொளி பெறச் செய்ய வல்லதாகலின் அவற்றில் நம் மனத்தைப் பதித்தல் வேண்டுமென்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உண்மை வலியது!&lt;br /&gt;உள்ளமும் வலியது!&lt;br /&gt;திண்மை தருவதும்&lt;br /&gt;தேர்வதும் அதுதான்.&lt;br /&gt;மண்மேல் அனைத்தும்&lt;br /&gt;மடிந்துமட் குவன!&lt;br /&gt;எண்மேல் எண்ணிய&lt;br /&gt;ஒருவனாய் இரு,நீ!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 16 உரைக் குறிப்புகள்&lt;br /&gt;1. ஆற்றல் சான்றது உண்மை.&lt;br /&gt;2. அந்த ஆற்றலை உள்ளமும் பெற்றிருக்கிறது. (நம் உள்ளமும் உண்மையை உள்ளார்ந்து பெறுமானால் நாமும் ஆற்றலுடையேமாய் மாறுவோம்.)&lt;br /&gt;3,4. தகைமை நிலைகளில் திண்மையைத் தருவதும், நல்லது தீயது ஆய்ந்து பார்த்து நன்மையைத் தேர்வதும் அந்த உண்மை சான்ற உள்ளந்தான் என்பதறிக.&lt;br /&gt;5,6. மற்று, இவ்வுலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் மட்கி அழிவனவாகவே உள்ளன.&lt;br /&gt;7,8. ஒருகால் அழியுந் தன்மையை உடைய இவ்வுலகில் அழியாது நிற்பது புகழாகலின், அப்புகழால் நிலைப்பேறு பெற்றிருக்கும் சான்றோரின் எண் வரிசையில் மேலும் எண்ணப் பெற்ற ஒரு சான்றோனாக நாம் விளங்குதல் வேண்டும் என்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புன்மை சிறியது!&lt;br /&gt;பொய்மையும் சிறியது!&lt;br /&gt;புன்மேல் பனித்துளி&lt;br /&gt;போலும் உடம்பதன்&lt;br /&gt;மின்போல் வாழ்க்கையில்&lt;br /&gt;மீந்துவ துயர்வே!&lt;br /&gt;புன்மையும் புரையும்&lt;br /&gt;பொக்கன; புதைவன!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 17 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. புல்லிய மனத்தன்மை ஆற்றல் நிலையினும், வினை நிலையினும் மிகவும் சிறுமையுடையதாகும்; இழிந்ததாகும்.&lt;br /&gt;2. அப்புன்மைத் தன்மை போன்றே பொய்மைத் தன்மையும் சிறுமையுடையதும், இழிந்ததும் ஆகும்.&lt;br /&gt;3-6. காலத்தாலும், சூழ்நிலைத் தகவாலும் புல்லின்மேல் வந்து பொருந்திய சிறிய பனித்துளி போல, உயிரை வந்து சார்ந்திருக்கும் இவ்வுடம்பொடு கூடிய வாழ்க்கையும் மின்னல் போலும் விரைந்து தோன்றி மறையக் கூடியதேயாம்! இவ்வாழ்வு உண்மை சார்ந்த உள்ளதொடு தக அமையப் பெற்றால் மீதமாவது என்பது உயர் பயன் ஒன்றுமே!&lt;br /&gt;7,8. புல்லிய மனத்தன்மையும், மனப் பொய்ம்மையும் விரைவில் மாயக் கூடியனவாகும்! புதைந்து போவனவாகும். எனவே அவற்றைக் கைக்கொள்ளற்க என்றபடி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தருக்குகொள் ளாதே!&lt;br /&gt;தன்முனைப் பகற்று!&lt;br /&gt;செருக்குச் சேற்றினில்&lt;br /&gt;சிதைந்தவர் பலபேர்!&lt;br /&gt;உருக்குலைத் திடும்,அது;&lt;br /&gt;உன்னையும் உம்மையும்!&lt;br /&gt;திருக்குலைத் திடும்,அது;&lt;br /&gt;தீமையும் விளைவிக்கும்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் -18 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. தான் ஒருவனே இந்நிலைக்கு வாய்த்துள்ளதாக என்றும், எதிலும் அறிவுச் செருக்கும், வினைச் செருக்கும், மனச் செருக்கும் கொள்ளாதிருக்க!&lt;br /&gt;2. தன்முனைப்பு எண்ணங்களை மனவறையினின்றும் அப்புறப்படுத்தி விடுக!&lt;br /&gt;3,4. அகந்தை கொண்டு அஃதால் வரும் மகிழ்வொடு தன்னிலையினின்று இழிந்தும் அழிவுச் சேற்றில் தள்ளப்பட்டுச் சிதைந்து போயினார் இவ்வுலகத்துப் பலராவர்.&lt;br /&gt;5,6. அம் மனச் செருக்கு நம்மின் பண்புருவைக் குலைத்தழிப்பது; அழிப்பதோடு, நம்மைச் சார்ந்தோர் எவராயினும் அவர்க்கும் அழிவு தர வல்லது!&lt;br /&gt;7,8. மேலும், அது நம்பால் உள்ள வேறுபாடற்ற நடுநிலைத் தன்மையால் அமைந்திருக்கின்ற அக அழகைக் குலைப்பதோடு, தீங்கையும் விளைவித்து விட வல்லதாகும். (திரு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உண்மையின், அச் செருக்காந்தன்மை நம்மின் பொருட் செல்வத்தையும், அறிவுச் செல்வத்தையும் மற்றும் செல்வ நிலைகளாகக் குறிக்கப் பெறுவன வேறு எதனையும் குலைத்தழிக்கும் என்றும் பொருள் கொள்க!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உலகுக் குரியனாய்&lt;br /&gt;உன்னை உயர்த்திடு!&lt;br /&gt;உலகுக் குரியராய்&lt;br /&gt;உயர்த்து மாந்தரை&lt;br /&gt;கலகக் கொள்கையில்&lt;br /&gt;கால்கோ ளாதே!&lt;br /&gt;விலகப் பயில்,நீ!&lt;br /&gt;வீணுரை வீணரை!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 19 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. இவ்வுலக மக்களுக்கு நாம் உரிமையினம் என்னும் பரந்த பெருமனத்தை உடையேமாக உயர்த்திக் கொள்ளுக! (நாம் சிற்றிறைவரும் உலக உடம்பரும் அல்லமோ?)&lt;br /&gt;3,4. அந்நிலைக்கு உயர்த்திக் கொண்டால் மட்டும் போதுவதோ? நம் இனத்தாராகிய இவ்வுலக மாந்தர் அனைவரையும் அதே போன்று மாந்த நலத்துக்குத் தாமும் அத்தகையரே என்னுமாறு உயர்த்துதல் வேண்டும். (அவர் தந்தமக்குரியராய் தந்தலச் சேற்றில் சிக்கியுழல்தலான் அவர்களையும் அந்நிலையினின்றும் மீட்க வேண்டும் என்றவாறு.)&lt;br /&gt;5,6. கெடும்பையும் குழப்பத்தையும் உருவாக்கி மக்கள் நலந்தீய்க்கும் எக் கொள்கையிலும் சென்று பொருந்தற்க!!&lt;br /&gt;7,8. வெறுமையான உரைகளை நீளப்பெய்து, நம் அரிய நேரத்தையும் ஆற்றலையும் வீண்டிக்கும் தகவிலா வீணர்களிடமிருந்து விலகி நிற்கப் பயின்று கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாந்த ஒளி,நீ!&lt;br /&gt;மந்த விலங்கில்லை!&lt;br /&gt;ஏந்தல் எனநட!&lt;br /&gt;இளைத்தும் தலைநிமிர்!&lt;br /&gt;காந்தப் பார்வையால்&lt;br /&gt;மக்களைக் கவர்ந்திழு!&lt;br /&gt;சேந்து,அவர் நினைவை&lt;br /&gt;செம்மை நினைவுவார்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 20 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. ஒளியார்ந்த மாந்த உயிரோம் நாம்! அறிவிலும் மனத்திலும் கீழ்ப்பட்ட விலங்கு அல்லேம்; நம் பிறப்பும் தோற்றக் கரணியமும் உயர்ச்சி நோக்கியது!&lt;br /&gt;3. எனவே, மாந்த உயிரிலேயே உயரியவர் நாம் எனும் பெருமிதத்தோடு நடையை மேற் கொள்க!&lt;br /&gt;4. பொருளாலும், உருவாலும் இளைத்துப் போகும் சூழல் வந்து நேரினும், அதுபோதும் நாம் தலை நிமிர்ந்தே நிற்றல் வேண்டும்.&lt;br /&gt;5,6. காந்தம் போலும் ஈர்ப்புப் பார்வையால் மாந்த இனத்தைக் கவர்ந்து நம் வழியில் செலுத்துவோமாக!&lt;br /&gt;7,8. தகவிலாப் பிறரின் தாறுமாறான நினைவுகளையெல்லாம் அவர் மனத்தினின்று சேந்திப் புறத்தெறிவோமாக. மேலும் அவரின் நெஞ்சக் குளங்களில் செவ்விய நல்லெண்ணங்களை வார்த்து நிரப்புவோமாக!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அறிவொளி விளக்கால்&lt;br /&gt;அவர்விளக் கேற்று!&lt;br /&gt;செறிவுரை பகர்ந்திடு!&lt;br /&gt;செழிக்க அன்புசெய்;&lt;br /&gt;முறிவுரை பகரேல்!&lt;br /&gt;முகவுரை கீழ்மை!&lt;br /&gt;வெறியுணர் வடக்கு!&lt;br /&gt;வீம்பறி யாமை!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 21 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. செறிந்தொளிரும் அறிவு விளக்கால், அவர்பால் அமைந்திருக்கின்ற அறியாமையிருள் கப்பிய விளக்குகளை ஏற்றி ஒளி பெறச் செய்க.&lt;br /&gt;3. அறிவார்ந்தவும், நுண்மையும், செறிவும் சார்ந்தவுமான பயன் விளைக்கும் உரைகளையே நிகழ்த்துக.&lt;br /&gt;4. நம்மை அண்டியோர் எவர்பாலும் அவர்கள் உள்ளமும் மனமும் இன்பத் துய்ப்பான் செழிப்புறுமாறு அன்பைப் பொழிக! (எல்லா அறிவு நிலைகளையும் பிணைப்பதும், வளரச் செய்வதும் அதுவாகலான்)&lt;br /&gt;5. நெருங்கிப் பேசுவோர் இணைவு முறிவுறுமாறு பிரிப்புணர்வு புலப்படும் பசையற்ற உரையை எக்காலும் எவர்பாலும் தவிர்க்க!&lt;br /&gt;6. பிறர் மகழ வேண்டும் என்பதற்கெனத் (தன்னலவுணர்வால்) போலி முகமனுரை செய்தல் கீழ்மையானதெனவே அதை முற்றுந் தவிர்க்க!&lt;br /&gt;7. உள்ளத்திற்கும் உடற்கும் கிளர்ச்சியூட்டித் திமிர்ந்தெழ வல்லவான வெற்று மிகையுணர்வுகள் தோன்றாவாறு அவற்றை அறிவான் கட்டுப்படுத்தி யடக்குக!&lt;br /&gt;8. வீம்பு - வீண்பெருமை; செருக்குடன் கொள்ளும் அறியாமை மனவெழுச்சி; ஆரவார முனைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உரையால் உரைபெறு!&lt;br /&gt;உவகையால் ஒளிசேர்!&lt;br /&gt;புரைசொல் இழக்கு!&lt;br /&gt;போலிமை வினைதவிர்!&lt;br /&gt;திரையிட் டிராதே!&lt;br /&gt;தீமையைத் துணிந்துகொல்!&lt;br /&gt;வரையறு போக்கை;&lt;br /&gt;வாழ்வைக் காதல்செய்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 22 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. நாம் பேசும் உரையின் நல்லுணர்வும், நல்லறிவும் அளவானே பிறர் எதிர்வுரையும் இருக்குமாகலின், நாம் பேசும் முதலுரையின் தொடுப்பைச் சிறந்ததாக்குக என்பது.&lt;br /&gt;2. ஒழுக்கம், நேர்மை, உண்மை, அறிவு இவற்றின் வழி விளைந்துள்ள மனக்களிப்பால் நம்மைச் சார்ந்து வரும் அந்நிலைகளைப் பற்றி ஒளி பெறுகின்ற நிலைக்குச் சான்றினனாக இருக்க!&lt;br /&gt;3. பயனில் கொடுஞ்சொற்கள் தீங்கையும், இழுக்கையுமே விளைக்கும்.&lt;br /&gt;4. உண்மைக்கு மாறான வெற்றாரவார வினைப்பாடுகளை எக்காலும் தவிர்க்க!&lt;br /&gt;5. அறிவாற்றல்களைப் பிறர்க்கும் வழங்கிப் பயன்படுமாறு செயாது அவற்றிற்குத் திரையிட்டு அமைந்து பயனின்றிக் கிடத்தல் கூடாதென்க. (திரைக்குள் மறைந்தபடி செய்யும் தீவினைகளைத் தவிர்க்க எனினுமாம்.)&lt;br /&gt;6. தீமைகள் எங்கு எவரால் எவரிடத்து நிகழ்த்தப் பெறினும், அங்கு அதனை அக்காலே துணிவொடு எதிர்த்தழிக்க!&lt;br /&gt;7. வினையையும் அதன் போக்கையும் பொருள், கருவி, காலம், இடம், பயன் இவற்றொடு தொடர்பு படுத்தித் திட்டவட்டமாக ஆய்ந்து நிரல் படுத்துக!&lt;br /&gt;8. மாந்த வாழ்க்கை ஒரு பேறும், உயர்ந்ததும் உயிர் மலர்ச்சிக்காகவும் அமைந்ததாகலின் அதை நன்குத் துய்த்திட வேண்டி அதன்பால் பேரன்பும் பேரீடுபாடும் கொள்க! (வாழ்வை எந்நிலையிலும் வெறுத்தலும், துறத்தலும் கூடாது என்பதாம்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கலைபயில்; எண்பயில்;&lt;br /&gt;கவினிலக் கியம்பயில்!&lt;br /&gt;சிலைபயில்; வண்ணச்&lt;br /&gt;சித்திரம் எழுது!&lt;br /&gt;அலைபயில்; கலம் பயில்!&lt;br /&gt;அளாவும் விண்பயில்!&lt;br /&gt;உலைபயில்; உடல்பயில்;&lt;br /&gt;உன்னை நீ,பயில்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 23 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. வாழ்க்கையமைப்பிற்கும் போக்கிற்கும் பயனும் எழிலும், சுவையும் ஊட்டுகின்ற எல்லாக் கலைகளையும் பயின்று கொள்க! எல்லா நடைமுறைகளுக்கும், அகத்தியமான கணக்கியல் அறிவைப் பயின்று கொள்க! ஒழுங்கையும் செப்பத்தையும் செழுமையையும் கூட்டுவிக்கின்ற எழிலார்ந்த அறிவு இலக்கியங்களைப் பயின்று கொள்க!&lt;br /&gt;3,4. சிலை வடிக்கும் அரிய கலையை (சிற்பக் கலையை)ப் பயின்று கொள்ளுக! அழகிய வண்ண ஓவியங்களை வரைந்து வரைந்து பயில்க!&lt;br /&gt;5. அலையிடை நீந்திப் பயிலும் கட்டுமரம், படகு, கப்பல் போலும் நீர்க்கலங்களை இயக்கப் பயிற்சி பெறுக!&lt;br /&gt;6. அண்டப் பரப்பில் அளாவிப் புடை விரியும் கோள்களையும் அவற்றின் இயக்கங்களையும் பற்றிய அறிவைப் பயில்க!&lt;br /&gt;7,8. சமையல் என்பது பெண்டிர்க்கேயுரிய தனிக் கலையாகக் கருதி ஒதுக்கி விடாது அக்கலையிலும் தேர்ச்சியுடையவனாகுக! உடலோம்பல் என்பது உயிரோம்பல் ஆதலின் அதற்கான பயிற்சியை வாழ்வு முழுமையும் தொடர்ந்து மேற்கொள்க! அவற்றொடு, நாம் யாரென நம்மையே அறிந்து கொள்க! (இப் பயிற்சி மெய்யறிவியல் பற்றிய கல்வியாலும், உணர்வாலும் மட்டுமே கைவரப் பெறுவதாகும்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விளங்கிய செல்வம்&lt;br /&gt;வினைபடு கருவி!&lt;br /&gt;வளங்களைப் பகிர்ந்துகொள்!&lt;br /&gt;வயல்விளை வறிவு!&lt;br /&gt;உளங்கொள ஈத்துண்!&lt;br /&gt;உவகையே ஈகை!&lt;br /&gt;களங்கல் விக்கமை!&lt;br /&gt;கனவிலும் கேள்விகொள்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 24 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. விளக்கம் பொருந்தி பெரிதாய் உலகோரால் மதிக்கப் பெறும் பொருட்செல்வம் இவ்வுலகில் அவ்வவரும் வினைப்படுவதற்கென்றுள்ள கருவியேயாகும். அதனை வெறும் வழிபாட்டுக்குரியதாக எண்ணலாகாது.&lt;br /&gt;3. முயற்சியாலும் சூழலாலும் வந்து வாய்க்கும் செல்வ வளங்களை, அவை வாயாத் தகுதியினரிடையே அவற்றைக் கலந்து பகிர்ந்து கொள்ளுக!&lt;br /&gt;4. அறிவு, வயல் விளைவைப் போன்றதாகும். (பயிர் விளைச்சலில் ஒரு வித்தினின்று பல்வித்துகளை விளைத்தல் போலும் ஓர் அறிவு வித்தூன்றல் பல அறிவு வித்துகளின் பெருக்கத்திற்கு மூலமாகுதலாலும் வேளாண்மை பகிரப் படுதலாலும் அறிவு வயல் விளைவு போன்றதாகும் என்க.)&lt;br /&gt;5. உள்ளம் விரும்பி பிறர்க்கு ஈந்து அவரொடு உண்டு மகிழ்க!&lt;br /&gt;6. உவகையென்பது பிறர்க்கீதலால் ஏற்படும் உள்ளக் களிப்பன்றிப் பிறிதில்லை; எனவே, ஈத்துவக்க!&lt;br /&gt;7. எவ்வகைச் சிறப்புக் கல்வியிலும் நுழைந்து நம்மால் வெற்றி காணவியலும் என்பதை நன்கு அறிந்தாய்ந்து அவ்வத் துறைகளுக்காகும் கல்விக் களங்களை அமைத்துக் கொண்டு அவற்றில் ஈடுபடுக!&lt;br /&gt;8. பிறர் கூறும் பயனுரைகளை நேரிலன்றிக் கனவிலும் உணர்வை அதில் ஊன்றிக் கொள்க என்றபடி. கேள்வியறிவை எவ்விடத்திலும் மிகுக்க என்றவாறாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறக்கச் செய்திடு!&lt;br /&gt;சிறப்பூண் சிறிதுண்!&lt;br /&gt;உறக்கம் மிகுதவிர்!&lt;br /&gt;ஓய்வுளக் கிளர்ச்சி!&lt;br /&gt;மறக்க மறப்பன!&lt;br /&gt;மதிப்பன மதி;மகிழ்!&lt;br /&gt;துறக்க, துறப்பன!&lt;br /&gt;துய்ப்புயிர் வாழ்க்கை!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 25 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. எவ்வினையையும், சிறப்பாகவும், முழுமையாகவும், செப்பமாகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் செய்க!&lt;br /&gt;2. அளவிற் குறைவெனினும் ஆற்றல் செறிந்த உணவாகத் தேர்ந்து உண்க!&lt;br /&gt;3. தேவைக்கு மேலான நீளுறக்கத்தைத் தவிர்க்க! (மிகுவுறக்கம், உடல் நலத்திற் கேலாததானும், காலக் கேடாக்குதலானும் அது தவிர்க்கவென்பதாம்)&lt;br /&gt;4. ஓய்வை முறையாக எடுத்துக் கொள்ளுதல் உள்ளத்தை எக்காலும் கிளர்ச்சியும், எழுச்சியும், சுறுசுறுப்பும் உடையதாக வைத்துக் கொள்ளப் பயன்படும்.&lt;br /&gt;5,6. மறக்கத் தக்க எவற்றையும் உடன் மறப்பதோடு, மதிக்கத்தக்க எதற்கும் உரிய மதிப்பைத் தருக!&lt;br /&gt;7,8. நேரிய வாழ்க்கைப் போக்குக்குத் தேவையற்ற, அல்லது மிகுவாக வேண்டப்படாது நீங்க வேண்டியதும், நீக்க வேண்டியதும் எவையெவையோ அவ்வவற்றைத் துறக்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓம்புக நல்லுடல்;&lt;br /&gt;உயிர்க்கது ஊர்தி!&lt;br /&gt;சோம்பல் இறப்பு!&lt;br /&gt;சுறுசுறுப் பியக்கம்!&lt;br /&gt;தீம்பர் இணைதவிர்!&lt;br /&gt;தேனினும் அளவுகொள்!&lt;br /&gt;தேம்பல் கோழைமை!&lt;br /&gt;திறலொடு துணிந்திரு!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 26 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. தூய்மையும், வலிமையும், தோற்றமும் ஆர்ந்ததாக உடம்பைக் கவனித்துக் காத்தோம்பிக் கொள்ளுக! ஏனெனில் வாழ்வு வழியைக் கடக்க நம்முயிர் இவர்ந்தேறியிருக்கின்ற ஊர்தியாக அஃது இருத்தலான்.&lt;br /&gt;3,4. சோம்பல் தன்மையென்பது ஒரு வகையில் இறப்புப் போல்வதே! அயர்வின்றி நிலைக்க, ஒன்றில் முழுமையாக யீடுபடும் வினைக்குத்தான் இயக்கம் என்று அறிக!&lt;br /&gt;5. எவ்வகையிலோ எவர்க்கோ எவரேனும் எப்பொழுதும் கெடும்பும் தீங்கும் விளைக்கினும் அன்னவரைத் தெரிந்து, உடன் அவரொடு கொண்ட தொடர்பைத் தவிர்த்துக் கொள்க!&lt;br /&gt;6. உண்ணக் கிடைத்தது தேனேயாயினும், அதிலும் அளவொடு உண்பாயாக!&lt;br /&gt;7,8. எந்நிலையிலும் எத்தகையத் தோல்வி ஏற்படினும், அதற்காகக் கலங்கிக் குமுறும் உளவெம்பலுக்குத்தான் கோழைமை என்று பெயர். (அதை விலக்குக!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நகைநட் பன்று;&lt;br /&gt;நன்னட் பறிந்துதேர்!&lt;br /&gt;பகைமுன் விலகு!&lt;br /&gt;பார்வையிற் கூர்மைகொள்!&lt;br /&gt;மிகைதவிர் எதிலும்!&lt;br /&gt;மெப்புரை தப்பு!&lt;br /&gt;புகைநெருப் பாகும்!&lt;br /&gt;பொய்வளை விழையேல்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 27 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1,2. நகையாடுதல் ஒன்று மட்டுமே நட்பாகாது. நல்ல நட்பு எது, தீ நட்பு எது என்று நன்கு ஆய்ந்தறிந்து தேர்ந்த பின்றை நட்புக் கொள்க!&lt;br /&gt;3. பழகுவோரிடம் உருவாகும் மன வேறுபாடுகள் வளரத் தொடங்கி, காழ்ப்புக்கு ஊற்றம் தந்து பகையாகப் பழுக்கு முன்னரே பதமாக விலகிக் கொள்க!&lt;br /&gt;4. பார்க்கப்படும் பொருள்களின் தன்மை முற்றும் ஒரே பார்வையில் விளங்குமாறு கூர்மை நிறைந்த நோக்கினனாக இருக்க.&lt;br /&gt;5. எந்தவொன்றிலும் அளவு மீறல் என்பது கேட்டுக்கு அடி கோல்வதாகலின் அவ்வவற்றிலும் அளவு மிகாவாறு கட்டுப் படுத்திக் கொண்டியங்குக!&lt;br /&gt;6. மெப்புக்கு உரைக்கப் பெறும் மெலுக்குப் போலியுரைகள் தவறு செய்தற்கு இடந்தருவனவாகலின் அவற்றைத் தவிர்க்க!&lt;br /&gt;7. புகை மிக மிக, அப்புகையிருந்து இடம் நோக்கி நெருப்பு அண்மிக் கொண்டிருத்தலை உணர்க! (எதனினும் எச்சரிக்கை வேண்டும் என்பது பற்றியாம்.)&lt;br /&gt;8. பொருட்கெனப் பொய்ந்நட்புப் பாராட்டும் போலியராம் பொது மகளிரால் உடல் நலக்கேடும், பொருளழிவும், வாழ்வழிவும், நிலையிழிவும் நேரும். ஆதலால் அன்னோரை ஒருகாலும் விரும்பற்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொழுதெழு முன்னெழு!&lt;br /&gt;பொழுதொடு துயில்சேர்!&lt;br /&gt;பழுதுறங் கின்மை!&lt;br /&gt;பனிநீர் நிதங்குளி!&lt;br /&gt;தொழுது பெறாதே!&lt;br /&gt;தூய்மை உடையணி!&lt;br /&gt;விழுதெனத் துணையிரு!&lt;br /&gt;வீறுவிந் தடக்கம்!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாடல் - 28 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. கதிரவன் எழுதற்கு முன் வைகறைப் பொழுதிலேயே உறக்கத்தினின்றும் விழித்தெழுக!&lt;br /&gt;2. நேரத்தொடும் இராக்காலத்தில் முறையாகத் துயில் கொள்ளுக!&lt;br /&gt;3. காலத்தோடும் முறையோடும் இராப் பொழுதில் துயில் கொள்ளாது வினையிடை யீடுபடல், உடல் நலக்கேட்டைத் தருவதன் வழி வாணாட் குறுமையையும், வலிவிழப்பையும் ஒரு சேரப் போர்த்து விடுமாகலான், அப்பழுது நேராதவாறு இராத்துயில் கெடுதல் தவிர்க்க.&lt;br /&gt;4. பனிபோலுங் குளிந்த நீரில் அன்றாடம் குளிக்கும் வழக்கத்தை மேற்கொள்க. உடல் தூய்மைக்கும், அரத்த வோட்டப் பெருக்கிற்கும் சுறுசுறுப்புக்கும், உறுதிக்கும் அதுவே ஏற்றதென்க.&lt;br /&gt;5. எப்பொருளையும் எவரிடமும் எங்கும் பணிவாக வணங்கி வேண்டிப் பெறற்க! (காலையெழுச்சிக்கும் நீர்க் குளியலுக்கும் அடுத்து இது கூறப் பெறுவதால், இறைவனையும் ஒன்றைப் பெற வேண்டும் என்னும் நசையால் தொழுதல் செய்யற்க என்றும் பொருள் கொள்க.)&lt;br /&gt;6. தூய உடை மதிக்கத் தகுந்த தோற்றப் பொலிவிற்கும் நலத்திற்கும் வழியமைப்பதாகலான் அத்தகைய உடைகளையே உடுத்துக!&lt;br /&gt;7. எந்நல்வினைக்குத் துணையாக விரும்பினும் விழுதுபோல் ஊன்றுதலும் உறுதியும் கொண்டு நிற்க!&lt;br /&gt;8. ஆண் மகனொருவற்கு வலிவும் பொலிவும் ஏற்படுவது அவனின் விந்தடக்கத்தின் பயனே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொருந்துணா விருந்து!&lt;br /&gt;புறவுணா முதுபிணி!&lt;br /&gt;அருந்தலும் அளவுசெய்!&lt;br /&gt;ஆசை அடக்கியாள்!&lt;br /&gt;திருந்துதல் வாழ்க்கை!&lt;br /&gt;தெறுநோய் முன்தவிர்!&lt;br /&gt;மருந்துணல் தீது!&lt;br /&gt;மணிநீர் மருந்து!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 29 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. ஒருவரின் உள்ளத்திற்கும் உடலுக்கும் ஏற்ற உணவு எதுவாயினும் அதுவே அவற்கு விருந்துணாவாம்.&lt;br /&gt;2. உடற்கும் உளத்திற்கும் ஒவ்வா எவ்வுணவும் முடிவில் பெரும்பிணி தருமாதலால் அது தவிர்க்க!&lt;br /&gt;3. குடிப்பெனினும் அளவு கொள் என்பதாம்.&lt;br /&gt;4. மனவிருப்பத்தை அறிவால் கட்டுப்படுத்தி ஆண்டு முறைப்படுத்திக் கொள்க!&lt;br /&gt;5. வாழ்க்கை என்பது நாம் திருந்துதற்கென்றே வந்து வாய்த்த கூறாகலின் நாளும், பொழுதும் தவறான போக்குகளைத் திருத்திக் கொண்டேயிருத்தல் வேண்டும் என்க.&lt;br /&gt;6. துன்பத்தை விளைக்கின்ற நோய் வரும் முன்னரே அதன் குறிப்புகளை உன்னிப்பாய்க் கண்டறிந்து தக்க முறையால் அது வராமல் தடுத்துக் கொள்க.&lt;br /&gt;7. மருந்துண்ணும் நிலைக்கு நோயை முற்ற விடுதலும் மருந்தை உணாப் போல் தொடர்ந்துண்ணலும், உடலுக்கு ஊறு விளைவிக்க வழி கோலுவதேயாகும்.&lt;br /&gt;8. பளிங்குப் போலும் தூய நீரும் ஓர் அரிய மருந்து போல்வதே! எனவே நோயிடை வெறும் நீரே உண்டும் பருவுணாக் கொள்ளாதும், நோய் நீக்கிக் கொள்க!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொதுமை உலகிது;&lt;br /&gt;பொதுமை வாழ்விது;&lt;br /&gt;பொதுமை உயிர்நலம்;&lt;br /&gt;பொதுமையே இயக்கம்!&lt;br /&gt;பொதுமைஉன் எண்ணம்;&lt;br /&gt;பொதுமைஉன் வினைகள்;&lt;br /&gt;பொதுமையால் ஆக்கு,உனை!&lt;br /&gt;புதுநலங் காண்பாய்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாடல் - 30 உரைக் குறிப்புகள்:&lt;br /&gt;1. இவ்வுலகம் பொதுமை நிலை உடையது.&lt;br /&gt;2. எனவே இவ்வுலக மக்களின் வாழ்வும் பொதுமையதே!&lt;br /&gt;3. உலக மாந்த வுயிர்களின் ஒட்டு மொத்த நலமும் பொதுமைக்கென வுள்ளதே!&lt;br /&gt;4. இவ்வுலக மாந்தர்களின் இயக்கங்கள் யாவும் பொதுமைக்கென இயங்குவதற்கே உள்ளன!&lt;br /&gt;5. நம்மில் நல்விளைவெடுக்கும் எல்லா உள்ளெண்ணங்களும் பொதுமை சான்றனவே!&lt;br /&gt;6. நாமும் ஓர் உலக உறுப்பாதலான், நம் வினைகள் யாவும் பொதுமைக்கென விருப்பனவே!&lt;br /&gt;7. எனவே நாம் நம்மைப் பொதுமையராக ஆக்கிக் கொள்ளுதல் வேண்டுவதாகும்!&lt;br /&gt;8. அதுபோதுதான் ஒரு புதிய, தேவையான, சிறந்த நன்மையை இவ்வுலகிலும் நம்முள்ளத்திலும், அறிவிலும் காண்போம். எனவே, பொதுமையாய் எண்ணிப் பொதுமையாய் இயங்கிப் புதுநலம் பெறுவாயாக! (முற்றும்)&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-3919530101371313150?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/3919530101371313150/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/3919530101371313150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/3919530101371313150'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2010/03/blog-post.html' title='வாழ்வியல் முப்பது'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bEftDVPH1e8/S5fRdEDPbPI/AAAAAAAAAHc/yJl9n5_o5OY/s72-c/pavalareru+mase+copy.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-4181397153804153344</id><published>2009-06-07T22:29:00.000-07:00</published><updated>2009-06-07T22:46:45.312-07:00</updated><title type='text'>தமிழிசை நினைவேந்தல்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_bEftDVPH1e8/SiykVZGIbDI/AAAAAAAAAG0/5cI5JES8_SQ/s1600-h/KarthikaiPoo2+copy.bmp"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5344827545202748466" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px" alt="" src="http://4.bp.blogspot.com/_bEftDVPH1e8/SiykVZGIbDI/AAAAAAAAAG0/5cI5JES8_SQ/s320/KarthikaiPoo2+copy.bmp" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;தமிழர் கழகத்தின் உறுப்பினரும் கன்னியாகுமரி திருவள்ளுவர் அறக்கட்டளை ஆட்சிப் பொறுப்பாளர் திருவாளர் மா.செ. தமிழ்மணி ஐயா அவர்களின் புதல்வியுமான தோழர் தமிழிசை தி.பி. 2038 விடைத்திங்கள் 31 ஆம் நாள் (14.6.2007) மறைவுற்றார்கள். அவர்களின் இரண்டாமாண்டு நினைவுநாள் எதிர்வரும் விடைத்திங்கள் (வைகாசி) 31ஆம் நாள் (14.6.2009) அன்று காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், சேயாறு வட்டம், மாத்தூர் மங்கலபுரத்தில் நடைபெற உள்ளது. நிகழ்வில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் &lt;strong&gt;வாழ்வியல் முப்பது&lt;/strong&gt; நூல் வெளியிடப் பெறுகின்றது. &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-4181397153804153344?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/4181397153804153344/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/4181397153804153344'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/4181397153804153344'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/06/blog-post.html' title='தமிழிசை நினைவேந்தல்'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bEftDVPH1e8/SiykVZGIbDI/AAAAAAAAAG0/5cI5JES8_SQ/s72-c/KarthikaiPoo2+copy.bmp' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-3139115163110535127</id><published>2009-04-13T23:53:00.000-07:00</published><updated>2009-04-14T02:28:24.844-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;object width="320" height="266" class="BLOG_video_class" id="BLOG_video-38cb808e60c1a82d" classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/get_player"&gt;&lt;param name="bgcolor" value="#FFFFFF"&gt;&lt;param name="allowfullscreen" value="true"&gt;&lt;param name="flashvars" value="flvurl=http://v5.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D38cb808e60c1a82d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330367494%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D751B33149EC09C794E5AE06B44AA95072F1BF564.8201D1D63610DF91D706F6921BFD1473A9B124C3%26key%3Dck1&amp;amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D38cb808e60c1a82d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DRqKvpyjvJ_lAtQohhrAae8stAMk&amp;amp;autoplay=0&amp;amp;ps=blogger"&gt;&lt;embed src="http://www.youtube.com/get_player" type="application/x-shockwave-flash"width="320" height="266" bgcolor="#FFFFFF"flashvars="flvurl=http://v5.nonxt8.googlevideo.com/videoplayback?id%3D38cb808e60c1a82d%26itag%3D5%26app%3Dblogger%26ip%3D0.0.0.0%26ipbits%3D0%26expire%3D1330367494%26sparams%3Did,itag,ip,ipbits,expire%26signature%3D751B33149EC09C794E5AE06B44AA95072F1BF564.8201D1D63610DF91D706F6921BFD1473A9B124C3%26key%3Dck1&amp;iurl=http://video.google.com/ThumbnailServer2?app%3Dblogger%26contentid%3D38cb808e60c1a82d%26offsetms%3D5000%26itag%3Dw160%26sigh%3DRqKvpyjvJ_lAtQohhrAae8stAMk&amp;autoplay=0&amp;ps=blogger"allowFullScreen="true" /&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-3139115163110535127?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='video/mp4' href='http://www.blogger.com/video-play.mp4?contentId=38cb808e60c1a82d&amp;type=video%2Fmp4' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/3139115163110535127/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/04/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/3139115163110535127'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/3139115163110535127'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/04/blog-post.html' title=''/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-1937783229508979710</id><published>2009-02-13T00:19:00.000-08:00</published><updated>2009-02-13T00:46:48.685-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bEftDVPH1e8/SZUydpj0wVI/AAAAAAAAABI/bM8WX_0qTio/s1600-h/soni.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/_bEftDVPH1e8/SZUydpj0wVI/AAAAAAAAABI/bM8WX_0qTio/s320/soni.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302199621252333906" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bEftDVPH1e8/SZUydnztMfI/AAAAAAAAABA/YXn0Lgj04Es/s1600-h/soni+copy.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px; height: 300px;" src="http://3.bp.blogspot.com/_bEftDVPH1e8/SZUydnztMfI/AAAAAAAAABA/YXn0Lgj04Es/s320/soni+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302199620782076402" border="0" /&gt;&lt;/a&gt;சிங்கள அரசுக்கு போர்க்கருவிகளை வழங்கி&lt;br /&gt;உளவு பார்த்து,&lt;br /&gt;ஆளணிகளை அனுப்பி,&lt;br /&gt;படை நடத்தும் தொழில்நுட்பங்களை அளித்து&lt;br /&gt;தமிழினப் படுகொலை நிகழ்த்தும்&lt;br /&gt;சோனியா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-1937783229508979710?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/1937783229508979710/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_8779.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/1937783229508979710'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/1937783229508979710'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_8779.html' title=''/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bEftDVPH1e8/SZUydpj0wVI/AAAAAAAAABI/bM8WX_0qTio/s72-c/soni.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-4797344609081082972</id><published>2009-02-13T00:06:00.000-08:00</published><updated>2009-02-13T00:08:51.684-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>இராசீவ்காந்தியின் வழியில் சோனியா</title><content type='html'>&lt;div class="entry"&gt; &lt;div class="snap_preview"&gt;&lt;p&gt;இந்திய அரசு சிங்கள அரசோடு கூடிக் குலவிக் கொண்டு அங்கு போராடும் மக்களைக் கொன்றொழிப்பது புதிதன்று. மலையக மக்களை சாத்திரி காலத்தில் நாடற்றவர்கள் ஆக்கியது. பின்னர் வந்த இந்திரா அங்கு தம் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்த சிங்கள உழைக்கும் மக்களின் அமைப்பாக இருந்த சனதா விமுக்த பெரமுன என்ற அமைப்பை (இன்றைய சனதா விமுக்த அமைப்பின் கொள்கையே வேறு) இந்தியப் படையை அனுப்பி முற்ற முழுதாக அழித்தார். அவர் மகன் இராசீவ்காந்தியோ ஈழவிடுதலைப் போரின் முன்னணிப் படையான விடுதலைப் புலிகளை அழிக்க நினைத்து தாமழிந்து போனார்.&lt;/p&gt; &lt;p&gt;இந்திராவின் மருமகளும், இராசீவின் மனைவியும், போபர்சு குற்றவாளியான குவரோச்சியின் உறவினருமான சோனியா இராசீவின் வழியில் இன்று படையினரையும் படைக்கருவிகளையும் சிங்கள அரசுக்குத் தாராளமாக அளித்து வருகிறார். 87இல் தமிழகத் தெருக்களில் அமைதிப்படை என்ற பெயரில் அனுப்பப்பட்ட அமளிப் படையின் நடமாட்டத்தைக் கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர். முகஞ்சுளித்தனர்.&lt;/p&gt; &lt;p&gt;இன்று அந்தக் காட்சிகள் மீண்டும் அரங்கேறத் தொடங்கி உள்ளது. இந்தியப் படையின் பீரங்கிகள் (இவற்றை இந்தியர்கள் குடியரசு நாள் அணிவகுப்பின் போது மட்டுமே பார்ப்பர்.) ஈரோடை வழியாகச் கொச்சி சென்று அங்கிருந்து சிங்களனின் கைக்குப் போய் சேர்ந்துள்ளன. அணியணியாக அந்நிகழ்வு இனி தொடரும் என எதிர்பார்க்கலாம். ஆனாலும் போர்க்களத்தில் அந்த பீரங்கிகள் வெடிக்குமா என்று தெரியாது. சோனியா அம்மையார் அனுப்புகின்ற பீரங்கி அல்லவா? எவ்வளவு கையூட்டில் வாங்கியதோ? அந்த பீரங்கிகள் வெடிக்கின்றவோ இல்லையோ நாளை ஈழப் போர்க்களத்தில் தோல்வியைத் தழுவும் போது பழியை இந்த பீரங்கிகள் மீதுதான் சிங்கள அரசு போடப் போகிறது.&lt;/p&gt; &lt;p&gt;ஏற்கனவே புலிகளின் போர் வானூர்தியைக் கண்டறிய வக்கற்ற சிங்களம் இந்தியா கொடுத்த இரேடார் தரம் குறந்தது; அதனால்தான் கண்டறிய முடியவில்லை என்று சொன்னது அல்லவா? அதுபோலவே இப்பொழுதும் நடக்கும். சோனியா அம்மணி அவர் கணவர் வழியில் நடையிடுவதை யார்தான் தடுக்க முடியும். அப்படி நடையிடும் போது ஏற்படும் பழிகளும் அவர்களையே சாரும்.&lt;/p&gt; &lt;/div&gt;&lt;/div&gt; &lt;p class="postmetadata"&gt;Posted in &lt;a href="http://thamizhmugilan.wordpress.com/category/uncategorized/" title="Uncategorized - அனைத்துப்பதிவுகளையும் காண" rel="category tag"&gt;Uncategorized&lt;/a&gt;  |   &lt;span class="commentlink"&gt;&lt;a href="http://thamizhmugilan.wordpress.com/2009/01/28/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%af%80%e0%ae%b5%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf/#respond" title="இராசீவ்காந்தியின் வழியில் சோனியா குறித்த மறுமொழி"&gt;No Comments »&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-4797344609081082972?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/4797344609081082972/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_627.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/4797344609081082972'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/4797344609081082972'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_627.html' title='இராசீவ்காந்தியின் வழியில் சோனியா'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-6831364600343433515</id><published>2009-02-13T00:04:00.000-08:00</published><updated>2009-02-13T00:06:06.812-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரசு'/><title type='text'>காங்கிரசின் திமிர்</title><content type='html'>&lt;div class="entry"&gt; &lt;div class="snap_preview"&gt;&lt;p&gt;காங்கிரசுக் கட்சியில் பக்தவச்சலம் என்றொருவர் இருந்தார். காமராசருக்குப் பின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தார். இந்தி ஒன்றே ஆட்சி மொழி என்ற சட்டம் நடைமுறைக்கு வந்த 1965இல் அவர்தான் தமிழகத்தின் முதலமைச்சர். இந்தித் திணிப்பை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்த போராட்டத்தை கடுமையான அடக்குமுறையால் நசுக்கிட முயன்றவர் அவர். இந்தியாவின் படை நேரடியாக இறங்கி அந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்கிட முனைந்தது. இன்றைய முதல்வர் கலைஞருக்கு இரும்புக் கரம் கொண்டு அடக்குவதைக் கற்றுத் தந்த ஆசான் அவர்தானாம். இதை இன்றைய முதல்வரே அவரின் புதைமேடையை திறந்து வைத்த போது சொன்னது. அப்படிப் பட்ட கொடுமைக் காரரான பக்தவச்சலத்திற்கு ஒரு பெயர்த்தி. செயந்தி நடராசன் என்பது அவரின் பெயர். இப்போது தில்லியில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து வருகிறார். அண்மையில் அவர், “இலங்கைச் சிக்கலில் இதற்கு மேல் இந்தியா எதுவும் செய்ய இயலாது” என்று திருவாய் மலர்ந்து அருளியிருக்கிறார்.&lt;/p&gt; &lt;p&gt;தமிழர்களை அழிக்கப் போர்க் கருவிகளைக் கொடுத்து, சிங்களப் படைக்கு பயிற்சி கொடுத்து, ஆளனுப்பி குண்டு போட வைத்து, உளவு பார்த்து இப்படி எல்லாவற்றையும் செய்து முடித்தபின் இன்னும் என்னதான் செய்ய இருக்கிறது?&lt;/p&gt; &lt;p&gt;இலங்கை அரசைப் பார்த்துச் சொல்ல வேண்டியதை தமிழர்களைப் பார்த்துச் சொல்லும் இவர் பக்தவச்சலத்தின் உண்மையான பிறங்கடைதான். ஒரு இனமே அழிந்து கொண்டு இருக்கும் நிலையிலும் இப்படி திமிரோடு பேச காங்கிரசாரைத் தவிர யாருக்குத்தான் மனம் வரும்?&lt;/p&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-6831364600343433515?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/6831364600343433515/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_4570.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/6831364600343433515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/6831364600343433515'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_4570.html' title='காங்கிரசின் திமிர்'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-168704727811722190</id><published>2009-02-13T00:02:00.000-08:00</published><updated>2009-02-13T00:04:46.728-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரசு'/><title type='text'>இவர்கள் வேறு காந்தியின் வாரிசுகள்</title><content type='html'>&lt;div class="entry"&gt; &lt;div class="snap_preview"&gt;&lt;p&gt;மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார்.&lt;/p&gt; &lt;p&gt;போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு உளவுத் துறைக் காவலர்கள் கண்டறிந்தனர். இச் செய்தி அப்போதே தமிழக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்தது.&lt;/p&gt; &lt;p&gt;அதன் பின்னர் தொடர்ச்சியாக சிங்களப் படையினருக்கு கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் பயிற்சி அளிக்கப் பட்ட செய்தி வெளியானது. இது குறித்து இந்திய அரசை நெருக்கிய போது அண்டை நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணம் பெற்றுக் கொண்டு பயிற்சி அளிப்பதாகவும் இது வழக்கமாக எல்லா நாடுகளுக்கும் செய்கின்ற உதவிதான் என்றும் சொல்லப்பட்டது. அப்படியென்றால் பாகித்தானுக்கும் அவ்வுதவி வழங்கப் படுமா என்று தமிழக மக்கள் இடையிலிருந்து எழுந்த கேள்விக்கு இன்று வரை விடையேதும் இல்லை.&lt;/p&gt; &lt;p&gt;அதையடுத்து இரேடார் வழங்கப் பட்ட செய்தி வெளியானது. இப்படி அடுக்கடுக்காக இலங்கைக்கு தாம் செய்து வரும் உதவிகள் அம்பலப்பட்டுப் போன நிலையில் வெளிப்படையாகவே போர்க் கருவிகள் வாங்குவதற்கென்றே நானூறு கோடி உருவாக்களை இந்திய அரசு சிங்கள அரசுக்கு வாரி வழங்கி தமிழக மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டது.&lt;/p&gt; &lt;p&gt;இன்றைக்கு பேராயக் கட்சி மீது தமிழக மக்கள் காட்டி வரும் வெறுப்புணர்வு சற்றே அந்த காங்கிரசாரின் எருமை மாட்டுத் தோல்களுக்கு உறைக்கத் தொடங்கி யுள்ளது போலும். அதனால்தான் முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல் தங்கபாலு இந்தியா, இலங்கைப் படைக்கு எந்த உதவியும் வழங்க வில்லை என்று கூறுகிறார். கேட்கிறவன் கேணையனாக இருந்தால் கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்வார்கள். தமிழர்களை அப்படிக் கருதி விட்டார் போலும் தங்கபாலு.&lt;/p&gt; &lt;p&gt;“சத்திய மேவ செயதே” அதாவது “வாய்மையே வெல்லும்” என்று எங்கும் முழங்குவோர் அச் சத்தியத்தைக் காக்க எடுக்கும் முயற்சிகளைக் கண்டு நகைக்கத்தான் தோன்றுகிறது.&lt;/p&gt; &lt;p&gt;இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் என்ன பொக்கை வாய்க் கிழவன் காந்தியின் வழி வந்தவர்களா? போபர்சு பீரங்கி வாங்கி ஊழல் செய்து பிடிபட்டு நான் திருடனில்லை என்று புலம்பித் திரிந்த இராசீவ்காந்தியின் வழி வந்தவர்கள்தாமே. &lt;/p&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-168704727811722190?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/168704727811722190/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/168704727811722190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/168704727811722190'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post_13.html' title='இவர்கள் வேறு காந்தியின் வாரிசுகள்'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-533562624155230691</id><published>2009-02-12T23:57:00.000-08:00</published><updated>2009-02-13T00:02:23.206-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரசு'/><title type='text'>இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி தேவையா?</title><content type='html'>&lt;div style="text-align: left;" class="entry"&gt; &lt;div class="snap_preview"&gt;&lt;p&gt;“இந்தியாவைப் போன்ற ‘சமஷ்டி’ அரசு ஒன்றை இலங்கையில் அமைத்தால் இனப்போராட்டம் முடிவுக்கு வந்து விடும்” என்று ஆனந்த சங்கரி போன்ற இரண்டகர்கள் கூறிக் கொண்டுள்ளனர். இந்தியாவின் ‘சமஷ்டி’ எந்தளவுக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிறது என்பதை அண்மைக்கால நிகழ்வுகள் நன்றாகக் காட்டி வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;இலங்கையில் வன்னிப் பகுதியில் வான்குண்டு மழை பெய்து மக்களைப் படுகொலை செய்து வந்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் வெகுண்டெழுந்த நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இலங்கையில் போரை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அவ்வாறு இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வில்லை எனில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என்று எச்சரிக்கவும் செய்தார்கள்.&lt;/p&gt; &lt;p&gt;அந்தத் தீர்மானத்தோடு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மயிலை மாங்கொல்லையில் நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருப்பதாகவும் அது தமக்கு நிறைவை அளிப்பதாகவும் சொல்லி தம்மைத் தாமே ஏமாற்றிக் கொண்டார். அனைத்துக் கட்சித் தீர்மானத்தை நிறைவேற்ற இந்தியா முன்வராத நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போரை நிறுத்த வேண்டும் என்று ஓர் தீர்மானத்தை நிறைவேற்றி இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்தது.&lt;br /&gt;தமிழ்நாட்டின் மக்கள் படிநிகராளிகள் அனைவரும் ஒரே குரலில் ஒலித்த அத் தீர்மானத்தையும் இந்தியா காலில் போட்டு மிதித்துக் கொண்டு கிளிநொச்சியை சிங்களப் படை எப்படி வெற்றி கொள்வது என்று அப்படைக்கு பாடம் எடுக்க இந்தியத் தளபதிகளை அனுப்பி வைத்தது.&lt;/p&gt; &lt;p&gt;இதோ இந்தக் கட்டுரை எழுதப் படும் வரை இந்தியா போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சார்க்கு நாடுகளின் மாநாடு தொடர்பாக இலங்கைக்குச் சென்று வந்த வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் அங்கிருந்த போதே போரை நிறுத்த இந்தியா வற்புறுத்த வில்லை என்றும், அப்பாவித் தமிழர்கள் மீது தாக்குதல் கூடாது என்று மட்டுமே கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். இப்படி தமிழக மக்களின் உணர்வுகள் இந்திய அரசினால் மிகவும் கேவலமாக மதிக்கப் படுகின்றது. இலங்கையிலிருந்து தமிழகம் வழியாக தில்லி சென்ற அவர் தமிழக முதல்வரை மரியாதைக்குக் கூட சந்திக்கவில்லை. இது தமிழக மக்களுக்குப் பேரதிர்ச்சியை அளிப்பதாகும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய அரசின் அதிகாரி ஒருவர் கூட மதிக்க வேண்டிய அளவுக்கு தமிழக முதல்வர் பதவி அதிகாரம் உடையது இல்லை என்ற உண்மையை இந்நிகழ்ச்சி மூலம் உறுதிப் படுத்திச் சென்றிருக்கிறார் சிவசங்கர் மேனன்.&lt;/p&gt; &lt;p&gt;ஈழத் தமிழர் சிக்கல் என்பது தமிழக மக்களோடு உறவுடைய சொந்தங்களின் சிக்கல் என்பதோ அந்தச் சிக்கலில் தமிழக மக்களின் சார்பில் ஆண்டு கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டு முதலமைச்சரைச் சந்தித்துக் கருத்து கேட்க வேண்டும் என்றோ இந்திய அரசோ, இந்திய அரசின் அதிகாரிகளோ எண்ணுவதே இல்லை.&lt;/p&gt; &lt;p&gt;தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நிறுத்தப்படும் என்ற உறுதி மொழியை சிங்கள அரசு அளித்துள்ளது என்று நிறைவடைந்த இந்திய அரசு அந்த உறுதி மொழி எந்தளவுக்கு நடைமுறைப் படுத்தப் படுகிறது என்பதைக் கண்காணிக்கிறதா?&lt;/p&gt; &lt;p&gt;தொடர்ந்து தமிழக மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். சாகடிக்க சிங்களப் படைக்கு கருவிகள் அளித்து மேலும் புதிய கருவிகள் வாங்க பணமும் அளித்து தமிழக மக்களின் உரிமையையும் இறையாண்மையையும் கட்டிக் காத்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இப்படியான ‘சமஷ்டி’யைத் தான் ஆனந்த சங்கரிகள் விரும்புகின்றார்கள் போலும்.&lt;/p&gt; &lt;p&gt;“என் உயரம் எனக்குத் தெரியும்”, “நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்” என்றெல்லாம் புலம்புகின்ற நிலையில் உள்ளார் தமிழக முதல்வர். அவர் அந்த நாற்காலியில் நீடிப்பதற்குச் செய்து வரும் இரண்டகங்களைப் போல் செய்து அதே போன்ற நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று ‘சமஷ்டி’ கோரும் வீடணத் தமிழர்கள் வேண்டுகின்றனர் போலும்.&lt;/p&gt; &lt;p&gt;இந்தியாவிற்குள் தமிழினம் அடிமைப் பட்டுள்ளது. சமன்மையாக வாழவில்லை. இந்திய அரசு ஒரு கூட்டாட்சியே இல்லை. கூட்டாட்சி என்று ஒப்புக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஒற்றையாட்சி முறையே நிலவி வருகிறது.&lt;/p&gt; &lt;p&gt;மாநில அரசு என்றொரு நிலை உள்ளதே என்று கேட்டால் அதிகாரமற்ற வெறும் நிர்வாக நோக்கத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பாகவே மாநில அரசுகள் இயங்கி வருகின்றன.&lt;/p&gt; &lt;p&gt;காவல் துறை என்பது இந்திய அரசியல் அமைப்புப் படி மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வருகின்ற ஒன்று. மும்பைத் தாக்குதலுக்குப் பின் அவ்வதிகாரத்தை குறுக்கு வழியில் இந்தியா இன்றைக்கு தன் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. உள்ளாட்சி மன்றங்கள், ஊராட்சிகள் மாநில அதிகாரத்திற்குள் வருவன.&lt;br /&gt;அவற்றை இராசீவ்காந்தி தன் ஆட்சிக் காலத்திலேயே பஞ்சாயத்துராச்சு சட்டத்தின் மூலமும், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழியாக நேரடியாக ஊராட்சிகளுக்கு நிதி வழங்குவது என்பதன் மூலமும் இந்தியாவின் கைக்குள் கொண்டு வந்து விட்டது இந்தியா.&lt;/p&gt; &lt;p&gt;கல்வியை இந்திராகாந்தி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு சென்று விட்டார்.&lt;/p&gt; &lt;p&gt;இப்படி அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சில்லறை அதிகாரங்களைக் கூட படிப்படியாக பறித்துக் கொண்டிருக்கின்றது இந்திய அரசு.&lt;/p&gt; &lt;p&gt;இந்த நிலையில் ஈழத்தில் இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி வேண்டும் என்று கேட்பது ஈழத்தமிழர்களுக்குச் செய்யும் இரண்டகம் இல்லையா?&lt;/p&gt; &lt;p&gt;ஈழமக்கள் உணர்ந்துள்ளார்கள். அவர்கள் விடுதலை வேண்டி நிற்கும் விடுதலைப் புலிகளைத்தான் நம்பியிருக்கின்றனர்.&lt;/p&gt; &lt;p&gt;கருணாக்களும், பிள்ளையான்களும், ஆனந்த சங்கரிகளும் அம்மக்களால் புறக்கணிக்கப்பட்டு சிங்கள ஆட்சியாளர்களால் தத்தெடுக்கப் பட்டுள்ளனர்.&lt;/p&gt; &lt;p&gt;இந்திய அரசு தத்தெடுத்த வரதராசப் பெருமாளுக்கு நேர்ந்ததுதான் இவர்களுக்கும் என்பதை காலம் காட்டும்.&lt;/p&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-533562624155230691?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/533562624155230691/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/533562624155230691'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/533562624155230691'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2009/02/blog-post.html' title='இந்தியாவைப் போன்ற கூட்டாட்சி தேவையா?'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-293756594976255278.post-5958160614413681853</id><published>2008-12-28T03:50:00.000-08:00</published><updated>2009-02-13T00:17:17.194-08:00</updated><title type='text'>மரத்தமிழர்களே அணி திரள்வீர்</title><content type='html'>அன்பார்ந்த தமிழக மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;தம் வாழ்நாள் முழுவதும் ஈழத்தமிழரின் உரிமைக்காகப் பாடுபட்ட நம் அருமைத் தலைவர் ராஜீவ்காந்தியை &lt;span&gt;தமிழினத்&lt;/span&gt; துரோகிகள் படுகொலை செய்துவிட்டனர் என்ற உண்மையை நம் தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலு உரக்க முழங்கியுள்ளார். ஆனால் நன்றி கொன்ற தமிழ் மக்களோ தலைவர் ராஜீவ்காந்தி சிலையை உடைத்துப் போடுகின்றனர். தலைவர் ராஜீவ்காந்தி இந்த நன்றி கொன்ற தமிழினத்திற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;யாழ்பாணத்தில் போரில் வெற்றி முகத்தில் இருந்த ஈழப்புலிகளை அடக்க இலங்கைக்கு அமைதிப் படை அனுப்பி பத்தாயிரம் தமிழர்களைக் கொன்று வீடுபேறளித்த அருமைத் தலைவரின் சிலையைத் தகர்ப்பதை எந்த மானங்கெட்ட தமிழன்தான் பொறுத்துக் கொண்டிருப்பது? எத்தனை தமிழச்சிகளின் தாலி பறிபோகவும், கற்பு களவு போகவும் காரணமாக இருந்தார் நம் அருமைத் தலைவர் ராஜீவ்காந்தி? அவரின் புகழுக்கு மாசு கற்பிக்கலாமா? அப்படி மாசு கற்பிக்கும் தமிழினம் உயிரோடு இருக்கலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக அண்டைநாட்டில் வாழும் தமிழர்களைக் கொல்லும் பணியில் ஈடுபடும் சிங்களப் படைக்கு ரேடாரும் அவர்களின் விமானங்களை இயக்கி குண்டு போட விமானிகளையும் அன்னை சோனியாவின் ஆசி பெற்ற பொருளாதார மேதை மன்மோகன் சிங்கின் அரசு அளித்தால் தவறா? நம் நாடு வறுமையில் இருந்தாலும் இலங்கை அரசு ஆயுதம் வாங்க நானூறு கோடி கொடுத்து நன்றி கொன்ற தமிழினத்தை அழிக்கும் திருப்பணியில் பங்கு கொண்ட இந்திய அரசைப் பழிக்கலாமா? தமிழ்நாடு இருளில் இருந்தாலும் சிங்கள நாட்டுக்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தம் போட்டால் சிலருக்கு பொறுக்க முடியவில்லை. இங்குள்ள சில துரோகிகள் நம்மைத் தூற்றுகிறார்கள். அவர்களைச் சும்மா விடலாமா? பொடா, தடா, குண்டர் சட்டங்கள் எதற்காக உள்ளன? பிடித்து உள்ளே போட வேண்டாமா?&lt;br /&gt;&lt;br /&gt;நம் தயவில் ஆட்சி நடத்தும் துரோகி கலைஞர் கருணாநிதி பிரிவினைவாதிகளோடு கைகோர்த்து மனித சங்கிலி நடத்துகிறாரே! பொறுத்துக் கொள்ளலாமா? நடிகர்களையும் இயக்குநர்களையும் தூண்டி விட்டு இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்த வைத்தாரே கலைஞர் கருணாநிதி. அவர் ஆட்சி நீடிக்கலாமா? அதற்காகத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகத் தேவையில்லை; தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுங்கள் என்று சொல்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் கொடுத்த நானூறு கோடியில் ஆயுதம் வாங்கி தமிழக மீனவர்களையும் கொல்கிறது என்கிறார்கள் சிலர். தமிழன் எங்கிருந்தால் என்ன? சாக வேண்டியவன்தானே! காங்கிரசுக்கும் நம் நல்வாழ்வுக்கும் தடையாக இருக்கும் தமிழர்கள் செத்துத் தொலைய வேண்டியதுதானே!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனின் மானம் கப்பலேறக் கூடாது என்பதற்காக கப்பல் ஓட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாருக்கு நாம் என்ன செய்தோம்? அவரை மண்ணெண்ணையும் அரிசியும் விற்க வைத்து அரசியலை விட்டே ஓட வைத்தோம். அதுதானே மரத்தமிழர் காங்கிரசின் கடமை. அந்த வழியில் செல்வதுதானே தலைவர் தங்கபாலுவின் வழியும் அண்ணன் ஞானசேகரனின் வழியும். நாம் பாதை மாறலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;நம் தலைவர் தங்கபாலு சொல்வதைத் தட்டாமல் ஏற்றுக் கொண்டு முதல்வர் கலைஞர் அமீரையும் சீமானையும் சிறைபிடித்தார் அல்லவா? அதே போல் கலைஞர் கருணாநிதி மயிலை மாங்கொல்லையில் பேசும்போது ஒட்டு மொத்தமாக தமிழர் அனைவரும் சாவோம் என்று சொன்னாரே. அதை நிறைவேற்றி கடனைக் கழித்து விடுவதுதானே காங்கிரசாரின் கடமை. அனைவரும் இந்திய அரசோடு கைகோர்த்து சிங்கள அரசுக்கு ஆயுதம் வழங்கி, கூடவே “ஆயுதத்தால் தீர்வு வராது; பேச்சு வார்த்தையாலே தீர்வு” என்று அறிவுரையும் வழங்கி அறிவுரையை தீவிரவாத புலிகள் ஏற்கவில்லை என்ற பழியையும் போட்டு தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம். கலைஞர் கருணாநிதி வாக்கை நிறைவேற்றுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, ஒகேனக்கல் பிரச்சனை ஆகியவற்றில் இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யவில்லை என்று மேடை போட்டு பேசுகின்றனர். இவர்கள் இப்படி பேசுவதற்கு உரிமை வாங்கித் தந்தது இந்த காங்கிரஸ்தான் என்பதை மறந்து விட்டுப் பேசுகின்றனர். அப்படிப் பேச விடலாமா? அந்த உரிமையை வாங்கியது இவர்கள் பேசுவதற்காகவா? இனி நம்மைத் தவிர யாரும் எதுவும் பேசக்கூடாதென முதல்வருக்கு ஆணையிடும் அதிகாரம் நம் கையில்தானே இருக்கிறது. இழவுக்கு அழக்கூட முதல்வருக்கு நாம்தானே அனுமதி அளிக்க வேண்டும். தவறிப் போய் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வரை நாம் எப்படி பாய்ந்து பிடுங்கினோம். அதைக்கூட அறியாமல் மைக் கிடைத்து விட்டது என்று வாய்கிழியப் பேசுகிறார்கள் இந்த இயக்குநர்கள். இந்தப் பிரிவினைப் பேச்சை எப்படி அனுமதிப்பது? இதிலெல்லாம் நமக்குத் துணை நின்ற செல்வி ஜெயலலிதாவுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். நம் அன்னை சோனியாவை வெளிநாட்டுப் பெண் என்று சொன்னதை மறந்து விட்டு இந்த விஷத்தில் நாம் அவரோடு கை குலுக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கபாலு கோஷ்டி, வாசன் கோஷ்டி, சிதம்பரம் கோஷ்டி, இளங்கோவன் கோஷ்டி …. இப்படி ஆளுக்கொரு கோஷ்டியாக பிரிந்து கிடப்பதற்கு காங்கிரஸ்காரர்களாகிய நமக்குத்தானே உரிமை உள்ளது. இந்தப் பிரிவினையை மறந்து விட்டு நதிநீர், மின்சாரம், அரிசி என்று பிரிவினை பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதைத் தமிழகத்தில் மட்டும்தான் சொல்ல வேண்டும் என்பதுதானே இந்திய இறையாண்மை. மராட்டியத்தில் சொன்னால் மரண அடி கொடுக்கிறான். அசாமின் எல்லைக்குள் விட மறுக்கிறான். காஷ்மீர் கண்ணெதிரே கழன்று செல்கிறது. கருநாடகத்தான் அவன் மட்டுமே இந்தியா என்று நினைத்துக் கொள்கிறான். இளிச்சவாய் தமிழனிடத்தில்தான் நம் இறையாண்மை, ஒருமைப்பாடு பஜனை செல்லுபடியாகும். செல்லுபடியாகும் இடத்தில் விற்பதுதானே நல்ல வியாபாரிக்கு அழகு. நமக்கு இது தெரியாதா? இது தெரியாமல் இன உணர்வு, அது இது… என்று இங்குள்ள சில ஏமாளிகள் பிதற்றித் திரிய கதர் சட்டைப் போட்ட காங்கிரஸ்காரன் அனுமதிப்பானா? அகிம்சை வழியில் கைது செய்து உள்ளே தள்ளி நாலு சாத்து சாத்தினால் போதாதா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இலங்கையிலும் இங்கும் தமிழினத்தை ஒரே அடியாக அழித்து விட்டு சிங்களரை ஓட்டுப் போட வைத்து நாம் நாட்டை ஆள்வோம். அடுத்த முறையாவது அன்னை சோனியாவின் ஆட்சி மலரப் பாடுபடுவோம். அந்த அமைச்சரவையில் தலைவர் தங்கபாலுவையும் அண்ணன் ஞானசேகரனையும் அமர்த்தி அழகு பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span&gt;ஜெய்&lt;/span&gt; &lt;span&gt;ஹிந்த்&lt;/span&gt;! &lt;span&gt;ஒழிக&lt;/span&gt; &lt;span&gt;தமிழினம்&lt;/span&gt;!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span&gt;இப்படிக்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மானங்கெட்ட&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;மரத்தமிழர்&lt;/span&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;/span&gt;&lt;span&gt;&lt;span&gt;&lt;span style="font-weight: bold;"&gt;காங்கிரஸ்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;(பின் குறிப்பு: இந்த நோட்டீஸ் எந்த வித பிரிவினைவாத எண்ணத்தோடும் இன மோதல்களைத் தூண்டும் எண்ணத்தோடும் வெளியிடப்பட வில்லை என்பதால் இதன்மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எங்கள் உடலில் ஓடும் சாக்கடை நீரால் காவல்துறையின் கால்களைக் கழுவி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/293756594976255278-5958160614413681853?l=thamizholi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thamizholi.blogspot.com/feeds/5958160614413681853/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2008/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/5958160614413681853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/293756594976255278/posts/default/5958160614413681853'/><link rel='alternate' type='text/html' href='http://thamizholi.blogspot.com/2008/12/blog-post.html' title='மரத்தமிழர்களே அணி திரள்வீர்'/><author><name>தமிழொளி</name><uri>http://www.blogger.com/profile/10963458981612023999</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
